Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் – ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி, அக்டோபர் 29:

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில், பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்றார்.

இந்திய தேர்தல் ஆணையம், 23 ஆண்டுகளுக்கு பின்னர், தருமபுரி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதனை முன்னிட்டு, விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்முறை குறித்து விரிவாக விளக்கப்பட்டது.


வாக்காளர் கணக்கெடுப்பு பணி நவம்பர் 4 முதல் டிசம்பர் 4, 2025 வரை நடைபெறும். வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9, 2025 அன்று வெளியிடப்படும். ஆட்சேபனை மற்றும் முறையீட்டு காலம் டிசம்பர் 9, 2025 முதல் ஜனவரி 8, 2026 வரை. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும்.

இப்பணிக்காக 1,501 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரியாக நிரப்பி, கையொப்பமிட்டு, வண்ணப் புகைப்படத்துடன் சேர்த்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், தேவையான வழிகாட்டுதல்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, கோட்டாட்சியர்கள் திருமதி காயத்ரி (தருமபுரி), திரு செம்மலை (அரூர்) உள்ளிட்ட அதிகாரிகளும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies